கள்ளக்காதல் - தட்டிக்கேட்ட கணவரை போட்டுத்தள்ளிய ரவுடி

9393பார்த்தது
கள்ளக்காதல் - தட்டிக்கேட்ட கணவரை போட்டுத்தள்ளிய ரவுடி
திருவள்ளூர் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஷ்ணுவும் (24), லட்சுமணன் (26) என்பவரும் நண்பர்கள். லட்சுமணனின் வீட்டிற்கு விஷ்ணு அடிக்கடி சென்ற நிலையில் லட்சுமணனின் மனைவியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று இரவு விஷ்ணுவும், லட்சுமணனும் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விஷ்ணு, லட்சுமணனை கத்தியால் வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி