பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்த வழக்கில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்த ஆவணங்களை கோவை சிறை அதிகாரிகளிடம் சென்னை போலீசார் வழங்கினர்.