சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகத்தில் போலீசார் சோதனை நடந்தி வருகின்றனர். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சவுக்கு சங்கர் காவல்துறையினரை களங்கப்படுத்தும் விதமாகவும், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தேனியில் வைத்து கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், தேனி காவல்துறையினர் அவரது வீடு அலுவலகங்களில் சோதனை செய்து வருகின்றனர்.