"பாஜகவின் போலி கருத்துக்கணிப்புகள் தோல்வியடையும்" - கார்கே

83பார்த்தது
"பாஜகவின் போலி கருத்துக்கணிப்புகள் தோல்வியடையும்" - கார்கே
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியாவில் இருக்கும் பல செய்தி தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அதில் அனைத்து நிறுவனங்களும் ஒரு சேர பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 350க்கும் அதிகமான இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாஜகவின் போலியான கருத்துக்கணிப்புகள் தோல்வியடையும். மக்களின் உண்மையான வாக்குகள் வெற்றி பெறும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி