வாரிசுகள் ஜெயிப்பார்களா.? கருத்துக்கணிப்பு முடிவுகள்

81பார்த்தது
வாரிசுகள் ஜெயிப்பார்களா.? கருத்துக்கணிப்பு முடிவுகள்
தந்தி டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வைகோவின் மகன் துரை வைகோ 38 சதவீதத்துடன் முதல் இடத்தையும், அதிமுக வேட்பாளர் 31 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு 38 சதவீதத்துடன் முதல் இடத்தையும், ஐஜேகேவின் பாரிவேந்தர் 27 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். வைகோவின் மகனும், நேருவின் மகனும் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெறுவதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி