3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

11660பார்த்தது
3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தென் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி