செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

67பார்த்தது
செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 40-வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று (ஜூன் 19) காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 25 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி