ஜெயங்கொண்டத்தில் மின்தடை அறிவிப்பு:

58பார்த்தது
ஜெயங்கொண்டத்தில் மின்தடை அறிவிப்பு:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் 20. 07. 2024 சனிக்கிழமை அன்று 110 கிவோ கூடுதல் GC Breaker அமைக்கும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று உடையார்பாளையம் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ. தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையார் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 09. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை மின் விநியோகம் செய்ய இயலாது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி