குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!

79பார்த்தது
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!
குற்றாலத்தில் கடந்த 2 தினங்களுக்குப் பிறகு நேற்று மதியம் முதல் சாரல் பெய்தது. இரவு வரை தொடர்ந்து பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் சில பிரிவுகள் ஒன்றாக இணைந்து தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இரவு முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய பிரதான அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

தொடர்புடைய செய்தி