அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும் - ராகுல்காந்தி

70பார்த்தது
அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும் - ராகுல்காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நேற்று (மே 22) தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பழைய நடைமுறைகளை மாற்றி அக்னிபாத் என்ற திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல் முறையாக ராணுவ இந்திய வீரர்களை தொழிலாளர்களாக மாற்றியுள்ளார் மோடி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 'அக்னிபாத்' திட்டம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இருந்ததுபோல், நிரந்தர பணியுடன் கூடிய ஆள்தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி