மதுபிரியரை பந்தாடிய 2 பெண்கள்.. வீடியோ

61பார்த்தது
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் முரட்டு போதையில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பெண்கள் அவர் சட்டை பையில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த நபர் சத்தம்போட்டுள்ளார். அப்போது திடீரென தங்களது கையை பிடித்து இழுத்ததாக கூறி அந்த இரண்டு பெண்களும் நாடகமாடி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் இரண்டு பெண்களும் போதையில் இருந்ததும், அந்த நபரிடம் பணம் பறிக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டனர்.

நன்றி: அப்டேட் நியூஸ் 360 தமிழ்.

தொடர்புடைய செய்தி