ஆசிரியர் கழகம் நடத்திய விழா.. பரிசுகள் வழங்கிய அமைச்சர்

68பார்த்தது
ஆசிரியர் கழகம் நடத்திய விழா.. பரிசுகள் வழங்கிய அமைச்சர்
பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நடத்திய 51-ஆம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கும், 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கிய ஆசிரியப் பெருமக்களுக்கும், பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி