ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 16 பேர் பலி!

84பார்த்தது
ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 16 பேர் பலி!
ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா மோர் என்ற ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்த ஊர் மக்கள் விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்நிலையில், படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி