சாலையில் கொட்டிய 12 ஆயிரம் லிட்டர் எரிபொருள்

71பார்த்தது
சாலையில் கொட்டிய 12 ஆயிரம் லிட்டர் எரிபொருள்
அரியலூர் மாவட்டம் தவுத்தாய்க்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் என்ற எரிபொருள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்திற்கு பெட்ரோல் டீசல் ஏற்றிக்கொண்டு அரியலூர் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது வாரணவாசி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் 4000 லிட்டர் பெட்ரோல் 8000 லிட்டர் டீசல் கீழே கொட்டியது. இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் ரசாயன நுரையுடன் கூடிய தண்ணீரை, லாரி மற்றும் பெட்ரோல், டீசல் கொட்டிய இடத்தில் பீச்சியடித்தனர்.

தொடர்புடைய செய்தி