இந்த நிலையில் அந்த நிலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு 50 ரூபாய் பாண்டு பத்திரத்தில் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மஞ்சுநாதன் உடைய அக்கா மகன் பிரபு என்பவருக்கு குடியிருக்க வீடு இல்லாததால் அதில் வீடு கட்டிக் கொள்ளும்படி மஞ்சுநாதன் கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த இடத்திற்கு பட்டா வாங்கித் தர கூறி சிவாஜி என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபு வீடு கட்டுவதற்காக பணிகள் தொடங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த சிவாஜி பட்டா வராமல் வீடு கட்ட கூடாது என்று பணிகளை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவாஜி என்பவர் பிரபுவின் மனைவி கஸ்தூரி மற்றும் அவருடைய உறவினர் சத்யா ஆகியோரை பிரம்பால் அடித்ததாகவும் தெரிகிறது.
'அதிமுக வாக்குகளை, தங்கள் வாக்குகளாக காட்ட பாஜக முயற்சி' - திருமா கருத்து