தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாமக நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் ராமதாஸ் மகள்கள் அவரிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதே போல பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் பரசுராமனும், ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் பேசி வருகிறார்.