பிரபல நடிகர் & தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குனர் ஆதிராஜன், "சினிமாவை நேசித்தவரல்ல... சுவாசித்தவர். இவ்வளவு சீக்கிரம் மறைந்து போவார் என நினைக்கவில்லை. திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து திறம்பட செயல்பட்ட சினிமா போராளி" என கூறியுள்ளார். ஆதிராஜன் அருவா சண்ட (2022), நினைவெல்லாம் நீயடா (2024) ஆகிய படங்களை இயக்கி வழங்கியுள்ளார்.