உடுமலை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் நாளை இயக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக நாளை மற்றும் 20ஆம் தேதி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் மாலை 4: 25 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6 மணிக்கு உடுமலைக்கும் 8. 20 மணிக்கு கோவைக்கு வந்து சேரும். இதேபோல 21ஆம் தேதி இரவு எட்டு நாற்பது மணிக்கு கோவையிலிருந்து ரயில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி