கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகள்

85பார்த்தது
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே குப் பைகள் குவிந்துள்ளன அவற்றை அகற்றகோரி சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வ லர்கள் கூறியதாவது
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினந்தோறும் பொதுமக் கள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் பல்வேறு அரசியல் கட்சியினரும், தேர்தல் அதிகாரிகளும் அதிகமானோர் வருகின்றர். அங்கு சேகரமா கும் குப்பைகள் குப்பைத்தொட்டிகளில் போடப்படுகின்றன.
தற்போது ஒரு சிலர் குப்பைகளை குப்பை தொட்டிகளில் போடாமல் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். கலெக்டர் அலுவ லக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியிலும் குப்பை நிறைந்து வெளியே சிதறிக்கிடக்கின்றன.
அவற்றை தினமும் சரியான முறையில் அப்புறப்படுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி