மூன்று நாட்கள் விடுமுறை டாஸ்மாக் கடை வியாபாரம் அமோகம்

80பார்த்தது
மூன்று நாட்கள் விடுமுறை முன்னிட்டு டாஸ்மாக் கடை வியாபாரம் அமோகம்

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் இன்னொரு பகுதியாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் செய்யக்கூடாத தேர்தல் நடத்தை விதிமுறைகளும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதன் எதிரொலியாக நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை என்பதால் நேற்று இரவு அனைத்து மதுபான கடைகளிலும் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ம், காங்கயத்திலும் திருப்பூர் சாலை, கரூர் சாலை, பழையக்கோட்டை சாலை, கோவை ரோடு, நால்ரோடு ஆகிய இடங்களில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் கூட்டம் அலைமோதியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி