உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் வரை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க பொதுமக்கள் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆற்று மதகு வழியாக 21ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது நாளொன்றுக்கு 200 கன அடி வீதம் 86. 40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி