திருப்பூர் பார் அசோசியேசன் தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல்

77பார்த்தது
திருப்பூர் பார் அசோசியேசன் தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல்
திருப்பூர் பார் அசோசியேசன் தேர்தல்
இன்று வேட்புமனு தாக்கல்



திருப்பூர் கோர்ட்டுகளில் பணியாற்றும் வக்கீல்கள் உறுப்பினர் களாக கொண்ட திருப்பூர் பார் அசோசியேசன் செயல்படு கிறது. இதில் தலைவர், 2 துணை தலைவர்கள் (ஆண், பெண்), செயலாளர், 2 இணை செயலாளர்கள் (ஆண், பெண்), பொருளாளர், 8 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகள் உள்ளன.
நடப்பு 2024-25-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக வக்கீல் சாய்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) அனைத்து பதவிகளுக்கும் மனுதாக்கல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. அன்று மாலை 4. 30 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி வேட்புமனு வாபஸ் பெறலாம். போட்டி ஏற்படும் பதவிகளுக்கு 25-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண் ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித் துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி