வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவிகித வாக்கை செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கமலா திரையரங்கத்திலிருந்து அரக்கோணம் சாலை, ம. பொ. சி. சாலை உள்ளிட்ட திருத்தணி நகரின் முக்கிய வீதிகளில் துணை ராணுவப் படை வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தியபடி அணிவுகுப்பில் ஈடுபட்டனர்.
திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் மதியரசன், சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி உள்ளிட்ட காவலர்களும் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.