கச்சத்தீவு விவகாரம் - இலங்கை முன்னாள் தூதர் கருத்து

82பார்த்தது
கச்சத்தீவு விவகாரம் - இலங்கை முன்னாள் தூதர் கருத்து
மோடி கச்சத்தீவு குறித்து காங்கிரஸ் திமுகவைக் விமர்சித்த நிலையில் அதுகுறித்து இலங்கை முன்னாள் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டி அளித்த அவர், இது தேர்தல் நேரம் என்பதால் பாஜக இதனை கையில் எடுத்துள்ளது, கள நிலவரப்படி பார்த்தால், தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அதனை சரிசெய்ய தற்போது கச்சத்தீவு பிரச்னையைகூறி வாக்குகளை கவர பார்க்கிறது. இந்த கச்சத்தீவு பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் போட்டு முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி