உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹோலிப் பண்டிகையையொட்டி ராணி (40) என்ற பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு ஒரு இளைய சகோதரர் இருக்கிறார். ராணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிகிறது. இந்நிலையில், சகோதரி ராணி மது குடிப்பதால் தனக்கு கெட்ட பெயர் உண்டாகிறது என்று கூறி அவரின் தம்பி ராணியின் கழுத்தை நெரித்து கொன்று வீட்டிலேயே புதைத்துள்ளார். இதையறிந்த போலீசார் ராணியின் உடலை மீட்டு, கொலை செய்த சகோதரனை கைது செய்தனர்.