தண்ணீர் கேட்டு வீட்டுக்குள் புகுந்து பெண் பலாத்காரம்

குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட வாலிபர் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். கேரளாவின் கொல்லம் சித்தாராவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சிற்றாறு பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவை (22) போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பெண்ணின் கணவரும் குழந்தையும் வீட்டில் இல்லை. அருகில் வீடுகள் எதுவும் இல்லாததால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குற்றவாளி, குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்பெண் சமையலறைக்குள் சென்ற போது, உள்ளே நுழைந்து பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடினார்.

அந்த பெண் அப்பகுதியினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அப்பகுதியினர் விஷ்ணுவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி