ஆப்கானிஸ்தானில் படகு மூழ்கியதில் 20 பேர் உயிரிழப்பு

52பார்த்தது
ஆப்கானிஸ்தானில் படகு மூழ்கியதில் 20 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ஆற்றைக் கடக்கும்போது படகு கவிழ்ந்ததில் நேற்று (ஜுன் 1ஆம் தேதி) 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தலிபான் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முகமந்த் தாரா மாவட்டத்தில் ஆற்றைக் கடக்கும்போது படகு கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக நங்கர்ஹார் மாகாணத்தில் தகவல் மற்றும் கலாச்சாரத் துறையின் பிராந்திய இயக்குநர் குரேஷி பட்லோன் தெரிவித்தார். கிராமவாசிகளின் கூற்றுப்படி, படகில் 25 பேர் பயணித்ததாகவும் அவர்களில் 5 பேர் உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி