நடுரோட்டில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

558பார்த்தது
நடுரோட்டில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
சேலம் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று (ஜுன் 1) இரவு பஸ்சுக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த அரிவாளை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் டி.எருமாபாளையம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோகுல் (23) என்பது தெரியவந்தது.

அரிவாள் வெட்டிப்பட்டவர் பள்ளப்பட்டியை சேர்ந்த பிரியா (29). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கணேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கணேஷ் இறந்து விட்டார். இதையடுத்து பிரியா பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கோகுலுக்கு, பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக கோகுலுடன் பேச பிரியா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுல், பிரியாவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி