வாக்கு எண்ணிக்கை - இரண்டு மாநிலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

54பார்த்தது
வாக்கு எண்ணிக்கை - இரண்டு மாநிலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜூன் 1) வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து, வருகிற ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டு மாநிலங்களில் தேர்தல் தொடர்பான வன்முறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி