தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி நான்கு மற்றும் ஆறு சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 380 ரூபாயும் சென்று திரும்ப 570 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியைக் கடக்க மாதம் 340 ரூபாய் உத்தேசக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.