பயங்கர விபத்து.. நால்வர் பலி

67பார்த்தது
பயங்கர விபத்து.. நால்வர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் புடான் பகுதியில் நேற்று (ஜுன் 1) பயங்கர விபத்து நடந்தது. உள்ளூர் கிராமத்தில் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மக்கள் மீது பிக்கப் வேன் மோதியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர். விபத்து நடந்ததையடுத்து கிராம மக்கள் திரளாக திரண்டனர். அக்கம் பக்கத்தினர் வேன் டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆத்திரமடைந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி