100 ஆக உயர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் எண்ணிக்கை.!

மக்களவையில் காங்கிரஸ் எம்.பிக்களின் பலம் 100ஐ எட்டியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சாங்லி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் பாட்டீல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். இவர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் வசந்தா பாட்டீலின் பேரன் ஆவார். காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இருந்த இவர், தேர்தலுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்திருப்பதால் மக்களவையில் காங்கிரஸ் எம்.பிக்களின் பலம் 100ஐ எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி