நீட் என்னும் மோசடித் தேர்வு - உதயநிதி ஸ்டாலின்

54பார்த்தது
நீட் என்னும் மோசடித் தேர்வு - உதயநிதி ஸ்டாலின்
சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்களுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி