பூமியில் பல விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தெரியாது. அது போலத்தான் சிங்கப்பூர் கடற்கரையில் டென்னிஸ் என்ற நபர் நடந்து சென்று கொண்டிருந்தபோது தண்ணீரில் விசித்திரமான வடிவம் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று இருப்பதை கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். சிறிது நேரத்தில் மீன் உள்ளே சென்றது.இதை வீடியோவாக எடுத்து அவர் இணையத்தில் பதிவிட்டார். இந்த வகை மீன்கள் 'ப்ளாப்ஃபிஷ் (Psychrolutes marcidus)' என்று அழைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.