இந்த நிலையில், குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இன்று (ஜுன் 9) அதிகாலை 3.40 மணியளவில் குட்டியானைக்கு பால் மற்றும் உணவு வழங்கப்பட்டு கால்நடை மருத்துவர் குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் வாகனம் மூலம் நீலகிரியில் உள்ள முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.
தலைவர்களின் நினைவிடங்களில் மோடி மரியாதை