தலைவர்களின் நினைவிடங்களில் மோடி மரியாதை

73பார்த்தது
தலைவர்களின் நினைவிடங்களில் மோடி மரியாதை
3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று (ஜுன் 9) மாலை 7.15 மணிக்கு பதவியேற்க உள்ள நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி, சதைவ் அடல் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், மொரீசியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் 2,500 காவலர்கள், 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, டெல்லி ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி