மதுரை தல்லாகுளம் ஆயுதப் படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் ஆனந்தன் (36). இவர் மதுரை இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி (37). இவர் மதுரை மாநகர் ஆயுதப் படையில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ஆனந்தன் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த போது தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து, சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.