ராஜஸ்தானில் லேசான நில அதிர்வு

85பார்த்தது
ராஜஸ்தானில் லேசான நில அதிர்வு
ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் நேற்றிரவு (ஜுன் 8) 11:47 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பிரதேசவாசிகள் வீடுகளை விட்டு சாலையில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சோன்பத்ராவில் 10 கி.மீ ஆழத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி