தலைநகர் டெல்லியில் கடந்த 72 மணி நேரத்தில் வீசும் கடும் வெப்பச் சலனம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 11 மற்றும் ஜூன் 19ஆம் தேதிக்கு இடையில், டெல்லியில் மொத்தம் 192 வீடற்றவர்கள் அதிக வெப்பத்தின் காரணமாக இறந்துள்ளனர் என்று ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட்க்கான NGO மையத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் குமார் அலேடியா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். நொய்டாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் 14க்கும் மேற்பட்டோர் வெயிலுக்கு பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.