“நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு மோடி தான் பொறுப்பு” - கார்கே

79பார்த்தது
“நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு மோடி தான் பொறுப்பு” - கார்கே
தேர்வு தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் காரணமாக யுஜிசி-நெட் தேர்வை மத்திய அரசு நேற்று (ஜூன் 19) ரத்து செய்தது. இந்த நிலையில், மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “யுஜிசி-நெட் தேர்வு ரத்து மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. மோடி அரசுக்கு இது அவமானம். நீட் தேர்வுத் தாள் கசிவுக்கு மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்" என ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி