BREAKING: 10 பேருக்கு கண் பார்வை பறிபோனது!

61பார்த்தது
BREAKING: 10 பேருக்கு கண் பார்வை பறிபோனது!
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பேரதிர்ச்சி அளிக்கும் வகையில், 10 பேருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. சேலம் மருத்துவமனையில் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 35-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதே போல் சிலருக்கு பார்வை மங்கலாக தெரிவதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி