உயிருக்கு கேடு என சொல்லியே விற்க அனுமதித்தார்கள்

51பார்த்தது
உயிருக்கு கேடு என சொல்லியே விற்க அனுமதித்தார்கள்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொல்லிக் கொண்டே சாராயத்தை விற்றார்கள். கள்ளச்சாராயத்தையும் விற்க அனுமதித்தார்கள். அதன் விளைவை கள்ளக்குறிச்சியில் கண்ணீராகவும், கதறல்களாகவும் கண்டு கொண்டிருக்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி