“போதைக்கு எதிரானப் போரில் ஈடுபட வேண்டும்” - கமல்

74பார்த்தது
“போதைக்கு எதிரானப் போரில் ஈடுபட வேண்டும்” - கமல்
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த நிலையில் இது குறித்து மநீம கட்சி தலைவரும் நடிகருமான கமல் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளாச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது” என குறிப்பிட்டுள்ளார்.