கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் (வீடியோ)

உத்திரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருவரை திருடன் என தவறாக எண்ணியுள்ளனர். மேலும், அந்நபரை கும்பலாக சேர்த்து தாக்கியுள்ளனர். இதனால் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி