கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம்

56பார்த்தது
கள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் இன்று (ஜூன் 19) உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி