“தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க வேண்டும்” - முதலமைச்சர் கடிதம்

71பார்த்தது
“தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க வேண்டும்” - முதலமைச்சர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் நேற்று (ஜூன் 18) தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (ஜூன் 19) கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி