“ரயில் சேவையை மோடி அரசு அழித்துவிட்டது” - காங்கிரஸ் குற்றச்சாட்டு

69பார்த்தது
“ரயில் சேவையை மோடி அரசு அழித்துவிட்டது” - காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரயில்வே துறை குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி, “ரயில்வேயில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன?, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் (CRS) ஏன் பலப்படுத்தப்படவில்லை?, தேசிய ரயில்வே பாதுகாப்பு நிதியத்தின் நிதி ஏன் 75% குறைக்கப்பட்டது?, ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்வது ஏன் மிகவும் விலை உயர்ந்தது?, ரயில்களில் ஜெனரல் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்பட்டது?” என கேட்கப்பட்டுள்ளது.