கள்ளச்சாராயம் விவகாரம்: 10 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.!

82பார்த்தது
கள்ளச்சாராயம் விவகாரம்: 10 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் வயிற்று வலி மற்றும் தலைவலி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் 10 பேர் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி