ஓசூர்: டூவீலர் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனப்பள்ளி பகுதியை சேர்ந்த முனியப்பன் மனைவி கங்கம்மா (43). இவர் டூவீலரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் அருகே சென்றபோது நிலைதடுமாறி டூவீலர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கங்கம்மாவை பெங்களூரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி