09- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவின் போது தேவையான படிவங்கள், எழுதுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பிரித்து தயார் செய்யும் பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீ. பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.